(எஸ்.எம்.அறூஸ்)
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 2022ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட சம்பியன்ஸிப் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி தென்கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு கொழும்பு பல்கலைக்கழக அணியும், தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியும் தெரிவு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி 4 - O என்ற கோல்கள் அடிப்படையில் அபார வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
சுமார் 18 வருடங்களின் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதைப்பந்தாட்ட அணியினர் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்பியன்ஸிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Editor
on
December 04, 2022
Rating:






